அசாமில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்து இயக்கம்!

அசாமில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அம்மாநில அரசு, பேருந்து போக்குவரத்தை நேற்று முதல் தொடங்கியது. அசாம் மாநிலத்தில் இதுவரை 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க திட்டமிட்ட நிலையில், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 நாட்கள் மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்தை இயக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று முதல் தொடங்கிய அரசு பேருந்து போக்குவரத்து, 27ம் தேதி வரை இயக்கப்படுகிறது. 50 சதவீத பயணிகள் மட்டும் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version