இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டத் தொடர்

புத்தாண்டில் தமிழகச் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

இந்த ஆண்டில் முதன்முறையாகத் தமிழகச் சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். நடப்பாண்டில் தமிழக அரசு மேற்கொள்ள உள்ள ஆறுகள் இணைப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆளுநரின் உரையில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அது குறித்தும், ஊரக வளர்ச்சித் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் ஆகியவை பற்றிய அறிவிப்பும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version