வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்திய கிரிக்கெட் அணி

ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொடரில் முதல் போட்டியை சந்திக்கவுள்ள விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, வெற்றியுடன் கணக்கை தொடங்கும் முயற்சியில் உள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேவேளையில், முதல் இரண்டு லீக் போட்டிகளில் தேல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்க அணி, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் தனது முழு திறமையை வெளிப்படுத்தும். எனவே, இன்றைய ஆட்டத்தில் பரபரப்பு அதிகம் இருக்கும் என்பதால் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. எனினும், வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. எனவே, இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அதிர்ச்சி அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Exit mobile version