வாகன எண்களை பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் தொடக்கம்

சென்னை நந்தனத்தில், வாகன எண்களை பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ANPR எனப்படும், வாகன எண்களை பதிவு செய்யும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நந்தனம், கிண்டி, டைடல்பார்க் ஆகிய இடங்களில் தலா 3 ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்துகொண்டு, நவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ANPR கண்காணிப்பு கேமராக்கள் மூலம், வாகன எண்ணை வைத்து, குற்றம் செய்துவிட்டு தப்பிச் செல்பவர்களை எளிதாக பிடிக்க முடியும் என தெரிவித்தார்.

Exit mobile version