விழுப்புரத்தில் ஸ்டாலின் கூட்டத்தில் கலைந்து சென்ற விசிகவினர்

திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழுப்புரம் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். விழுப்புரத்தில் திமுகவினரை பணியாற்ற விடாமல் பொன்முடி தடுத்து விசிகவின் வெற்றி வாய்ப்பை பறிக்க நினைப்பதாக கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர்.

வேட்பாளர் ரவிக்குமார் பேசும்போது இருந்த கூட்டம், ஸ்டாலின் பேசும்போது கலைந்து சென்றது. இதனால் பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே இருந்தன. கூட்டம் இல்லாததால், திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவினருக்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version