தனது குடும்பத்தினருக்கு பதவி வழங்குவதே ஸ்டாலினின் எண்ணம்

மக்களவை, இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 நாட்களாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதனடிப்படையில் இன்று, வாலாஜாபாத்தில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தனது குடும்பத்தினருக்கு பதவி வழங்குவதற்கும், நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவுமே திமுக பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் கூறிவருகிறார் என்று குற்றம்சாட்டினார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கொடநாடு விவகாரத்தில், கூலிப்படைக்கு தலைவராகிவிட்டார் மு.க.ஸ்டாலின் என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version