கனவு கண்ட ஸ்டாலின்: பதிலடி கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என கனவு கண்ட ஸ்டாலினுக்கு தமிழக வாக்காளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை அகற்றப் போவதாக ஸ்டாலின் போகும் இடமெல்லாம் மக்களே வெறுக்கும் அளவுக்கு புலம்பி வந்தார். முகம் சுளிக்க வைக்கும் அவரது பேச்சுக்கு தமிழக மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.இதன் மூலம் அதிமுக ஆட்சி தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. 22 தொகுதிகளில் 4 தொகுதிகளை வென்றாலே அதிமுக ஆட்சி தொடரும் என்ற நிலையில் அதை விட அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்று இருப்பதால், ஸ்டாலினின் கனவை மக்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர்.

Exit mobile version