ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி : சரத்குமார்

ஆட்சியை கவிழ்க்க சதி, ஆர்பாட்டம் போன்றவற்றை மட்டுமே திமுக தலைவர் ஸ்டாலின் செய்வார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து ராசிபுரம் அடுத்த சிங்ளாந்தபுரத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணி குழப்பம் இல்லாத மெகா கூட்டணி என்றார்.

ஸ்டாலின் எப்போதும் போராட்டம், ஆர்பாட்டம், ஆட்சி கவிழ்க்க சதி இதை மட்டுமே செய்வார் எனக் குற்றம் சாட்டிய அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என பேசினார். பிரச்சாரத்தின் போது மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி, சமுக நலத்துறை அமைச்சர் சரோஜா, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version