ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி

வன்னியர் சொத்துக்களை அபகரிப்பதாக கூறும் ஸ்டாலின் அதை நிரூபிக்க தவறினால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என பாமக இளைஞரணி தலைவர் அண்புமணி சவால் விடுத்துள்ளார். ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து மயிலம் பகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வன்னியர் சொத்துக்களை எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அபகரிப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மேடைதோறும் பேசி வருகிறார்.

அதனை அவர் நிரூபித்தால் அவர்கள் என்ன சொன்னாலும் நாங்கள் தயார் என்றும், நிரூபிக்க தவறினால் தி.மு.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் தயாரா? என்றும் சவால் விடுத்தார்.

Exit mobile version