ஸ்டாலினின் நாற்காலி கனவு என்றும் பலிக்காது : ராமதாஸ்

தனது தந்தை அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும், கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்க போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி சேலத்தின் மேட்டூரை அடுத்த மேச்சேரி, கொளத்தூர் பகுதிகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் திமுகவின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும் என்றும், அதை அதிமுக தலைமையில் அமைந்துள்ள இந்த மெகா கூட்டணி ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் அன்புமணி ராமதாசை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அதிமுக கூட்டணி மெகா கூட்டணி, மகா கூட்டணி என்று தெரிவித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றும் அதே நிலைதான் தற்போதும் வரப்போகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

Exit mobile version