கதிர் ஆனந்தை துரைமுருகனின் சகோதரர் எனக் கூறிய ஸ்டாலின்

வழக்கமாக பொது மேடைகளில் பேசும் போது உளறும் ஸ்டாலின், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை, துரைமுருகனின் சகோதரர் என கூறிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகிலுள்ள செக்குமேடு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை, திமுக பொருளாளர் துரைமுருகனின் சகோதரர் என கூறினார். இதனால் அங்கு கூடியிருந்த திமுகவினரும், பொதுமக்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

Exit mobile version