மறைந்த எம்.எல்.ஏ பெயரை மாற்றி சொன்ன ஸ்டாலின்

கிருஷ்ணகிரி அருகே மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ பெயரை, மு.க. ஸ்டாலின் மீண்டும் தவறாக தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். திருப்பரங்குன்றம் தொகுதி பற்றி பேசிய ஸ்டாலின், மறைந்த அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸுக்குப் பதிலாக சாமி என்று தெரிவித்தார். இவ்வாறு பெயரை மாற்றி சொன்னதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அண்மையில் ஸ்டாலின் சிவகங்கை அருகே நடந்த கூட்டத்தில் பேசும்போது, ஏ.கே.போஸின் பெயரை மாற்றி உளறிய காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முன்னதாக ஸ்டாலின் சுதந்திர தினத்தேதியையும், குடியரசு தினத்தேதியையும் மறந்து, ஒன்றிற்கும் மேற்பட்டமுறை மாற்றிக்கூறி உளறிக்கொட்டிய சம்பவம், தலைவருக்கான தகுதியற்றவர் என மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது என்பது நினைவுகூரத்தக்கது.

Exit mobile version