தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்தவே ஸ்டாலின், தினகரன் கைகோர்ப்பு: தமிழிசை

தமிழகத்தில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே டிடிவி தினகரனும் திமுக தலைவர் ஸ்டாலினும் கைகோர்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி செய்த போது தூத்துக்குடி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவலைப்படாத ஸ்டாலின், தற்போது அனைத்தும் சரிசெய்யப்படும் என கூறுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version