கதை பேசியே மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்

திமுக ஆட்சியில் எந்த திட்டம் கொண்டு வந்தோம் என்று கூறாமல், கதை பேசியே ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தலைவராக இருக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை என்றும் தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும் கூறினார்.

காவிரி பிரச்சனைக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்றும், அதிமுக உரிய நீரை பெற்று தந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். அனைத்து வசதிகளுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Exit mobile version