ஹைட்ரோ கார்பன் குறித்து புரிதல் இல்லாமல் ஸ்டாலின் பேசுகிறார் : அமைச்சர் பாண்டியராஜன்

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புரிதல் இல்லாமல் கருத்துக்களை தெரிவித்து வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை கிண்டியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் கடவுள் மறுப்பு பேசுவோரின் கருத்துக்களுக்கு அரசு செவி சாய்க்காது என்றும், கடவுள் பக்தி உள்ள உண்மையான பக்தர்களின் கருத்துக்களை ஏற்று அரசு முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஸ்டாலின் புரிதல் இல்லாத கருத்துக்களை தெரிவித்து வருவதாக விமர்சித்த அமைச்சர் பாண்டியராஜன், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது என குறிப்பிட்டார்.

Exit mobile version