அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை சட்டத்தை ஸ்டாலின் எதிர்க்கிறார் : கே.பி.முனுசாமி

அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை சட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பதாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சிகாணப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, அதிமுகவை சேர்ந்த கன்னியப்பன், செம்பரப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு சீனிவாசன், சூளகிரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ராம்நாத் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். இவர்கள் மூன்று பேரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஸ்டாலின்  அரசியல் ஆதாயம் தேடுவதாக சாடினார்.

Exit mobile version