ஸ்டாலின் போன்று அறிக்கை மட்டும் விடுபவர் அல்ல முதலமைச்சர் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுக தலைவர் ஸ்டாலின் போன்று ஒரே அறையில் இருந்து அறிக்கை மட்டும் கொடுக்காமல், மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு சேவையாற்றி வருபவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சியை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version