மருமகனின் குழுவினரால் இயக்கப்படும் ஸ்டாலின் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம்

ஸ்டாலினின் மருமகன் ஒரு குழு வைத்துள்ளதாகவும், அவர்கள் எங்கு பேச வேண்டும் என கூறுகிறார்களோ அங்கு மட்டுமே ஸ்டாலின் பேசுவார் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மாண்டபத்தில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஸ்டாலின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு இல்லையென திமுகவினரே தங்களுக்குள் பேசிக் கொள்வதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Exit mobile version