பொய் பேசுறதுல கருணாநிதியை மிஞ்சிட்டாரு : ஸ்டாலினை விளாசும் அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், செஞ்சி நகர அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் திமுகவினர் பொய்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். அனைத்து பகுதிகளிலும், மக்களிடையே அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு பெருகியுள்ளதாக கூறினார்.

Exit mobile version