வெயில் காரணமாக கூட்டம் குறைவாக இருந்ததாக ஸ்டாலின் சமாளிப்பு

திமுக கூட்டணியில் 10 கட்சிகள் இருந்தும் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினின் பேச்சை கேட்காமல் கூட்டம் கலைந்து சென்றதால் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தார். திருச்சி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், பெரம்பலூர் சட்டமன்ற ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கென பொதுமக்கள் அமர்வதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

கூட்டத்திற்கு தாமதமாக வந்த ஸ்டாலின், கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை சமாளிக்கும்விதமாக, கொளுத்தும் வெயில் காரணமாக கூட்டம் குறைவாக இருந்ததாக கூறி அவர் சமாளித்தார். பொதுக்கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்திருந்தும், பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்தது ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோரை சங்கடப்படுத்தியது. இதையடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

Exit mobile version