திமுக படுதோல்வி அடையும் என்ற அச்சத்தில் ஸ்டாலின் இருக்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்ற அச்சத்தில் ஸ்டாலின் இருப்பதாக,  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டி காலனியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால், சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பதாக கூறினார். தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த ஸ்டாலின் முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Exit mobile version