எதிர்கட்சி தலைவர் பொறுப்பை உணராதவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை உணராதவர் என்றும், அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற நோக்கமே அவருக்கு உள்ளதாகவும், அந்த கனவு ஈடேறாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

அமெரிக்கா, சிகாகோ மாகாணத்தில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை, வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை, அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சி தலைவர் என்கிற பொறுப்பை செய்யாமல், முதலமைச்சர் கனவிலேயே ஸ்டாலின் இருப்பதாக கூறினார். ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெவித்து வருவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Exit mobile version