தமிழகத்திற்கு ஸ்டாலினால் எதுவும் பெற்றுத்தர முடியாது

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் தந்த ஒரே தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிடம் இருந்து, தமிழகத்திற்கு ஸ்டாலினால் எதுவும் பெற்றுத்தர முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். தேனி தொகுதி அதிமுகவின் எக்கு கோட்டை என்று கூறிய துணை முதலமைச்சர், 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிப் பெறும் என்று கூறினார்.

Exit mobile version