ஸ்டாலின்,சந்திரபாபு நாயுடு சந்திப்பு காங்கிரசில் பிளவை ஏற்படுத்தாது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவையும் ஏற்படுத்தாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளுநர் கிரண்பேடிக்கும் தனக்கும் மோதல் எதுவும் கிடையாது என்று தெரிவித்தார்.

ஆளுநர் அவரது எல்லைக்குள் செயல்பட வேண்டும், அப்படி செயல்படாதது தான் சிக்கல் எனவும் கூறினார். ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவையும் ஏற்படுத்தாது என தெரிவித்த நாராயணசாமி, பாஜக ஆபத்தான கட்சி மட்டுமல்ல, நாட்டையே சீர்குலைக்கும் கட்சி என்று விமர்சித்தார்.

 

 

 

 

 

Exit mobile version