ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் முதல் முறையாக போட்டியிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

MBA முதுநிலை பட்டதாரியான மாதவராவ், 1986ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர், தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

தேர்தல் முடிவு வரும் முன்பே மாதவராவ் உயிரிழந்தது, அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version