ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய மாசி மாத தெப்பத் திருவிழா

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலய மாசி மாத தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில்மாசி மாதத்தில் 9 நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்தைச் சேர்ந்தடைந்தார். பின்னர் திருமஞ்சனம் கண்டருளி, தீப்பந்தங்களால் சூழப்பட்டு, ஒளியில் மிளிர்ந்தபடியே சென்ற நம்பெருமாளை வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Exit mobile version