"இலங்கை கடற்படையினர், மீனவர்கள்ன்னு எல்லோரும் எங்கள தாக்குன்னா நாங்க எங்கதான் போறது?" – தமிழ்நாடு மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

மேலும், மீனவர்களின் வலைகளை கடலில் வெட்டி எறிந்த இலங்கை கடற்படையினர், ஒலி பெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்ததால், அவர்கள் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததனர்.

Exit mobile version