இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி போட்டி

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில், அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்ச்சி கொழும்புவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் செனநாயக்க அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஒரு மாற்றுசக்தி தேவை எனவும், அந்த மாற்று சக்தியாக இருப்பதற்காக தான் போட்டியிடுவதாக கூறினார்.

Exit mobile version