இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைமைத் தேர்தல் ஆணையர் மகிந்தா தேசபிரியா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி தொடர்பாக சபாநாயகர், அதிபர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரோடு கலந்தாலோசிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடித்து சிறிசேனா ஆட்சியைப் பிடித்தார். இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரை, அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்ற அதிபருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version