அதிபர் தேர்தல்: பொதுஜன பெரமுன-இலங்கை தொழிலாளர் காங். இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு இடையிலான அதிபர் தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு வழங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தை தொடர்ந்து, கொழும்பு மன்ற கல்லூரியில் வைத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version