ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க நீடிப்பார் – சபாநாயகர் கரு.ஜெயசூர்யா

நாடாளுமன்றத்தில் ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க நீடிப்பார் என அதிபர் சிறிசேனவுக்கு சபாநாயகர் கரு.ஜெயசூர்யா கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியை ரத்து செய்வதாக அதிபர் சிறிசேன அதிரடியாக அறிவித்தார். புதிய பிரதமராக ராஜபக்சவையும் நியமித்தார். இதனால் இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இதனிடையே 14ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என அதிபர் சிறிசேனவுக்கு சபாநாயகர் ஜெயசூர்யா கடிதம் எழுதியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்ரம சிங்க, இறையாண்மை அடியோடு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version