பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேன சந்திப்பு

பிரதமர் மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபாலசிறிசேன மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

2-வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நேற்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பங்கேற்றார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், 2 நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.

Exit mobile version