தமிழக மீனவர்களை மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்களை மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள், மரியதாஸ், நல்லதம்பி, ராமச்சந்திரன், அருண் ராஜ் ஆகியோர் மீனவர் அருட் செல்வத்திற்கு சொந்தமான படகில் கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கையிலிருந்து வந்த கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி, வாக்கிடாக்கி, ஜிபிஎஸ், செல்போன், டார்ச் லைட், மீன்பிடி வலை, சிக்னல் லைட் உள்ளிட்ட சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சூறையாடி சென்றனர். இதே நிலை தொடர்கதையாக நடந்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

 

Exit mobile version