தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குலுக்கு ஆளாகினர். நாகையை சேர்ந்த பாரதிதாசன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் ஆறுகாட்டுத்துறையில் இருந்து 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி விட்டு தப்பினர். பலத்த காயமடைந்த அவர்கள் வாக்கி டாக்கி மூலம் ஆறுகாட்டுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரும், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த வேதாரண்யம் அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட கவுன்சிலர் திலீபன் உள்ளிட்டோர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Exit mobile version