இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது பயங்கர தாக்குதல்

கச்சத்தீவு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 17ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 71 மீனவர்கள் 9 விசைப்படகுகளில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இந்திய எல்லைப் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிகிறது.

மீனவர்களை கட்டிவைத்து இரும்புப் கம்பியால் தாக்கியதாகவும் ரோந்து கப்பல்களை மோதி விசைப்படகுகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மீனவர்கள் வலைகளை அப்படியே விட்டுவிட்டு காயங்களுடன் கரை திரும்பியுள்ளனர்.

Exit mobile version