புதுகோட்டையில் இலங்கை கடற்படையினரால் 4 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 4பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

கோட்டைப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 232 விசைப்படகுகளில் சுமார் 600-க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே இந்திய எல்லை கடல் பகுதியில் 19 நாட்டிக்கல் மைலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான படகு பழுதாகியுள்ளது. அங்கு வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ் ஆகிய நான்கு மீனவர்களை சிறைபிடித்துச் சென்றுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை முகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Exit mobile version