தமிழ்நாடு மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படையினர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அதில், சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 40 மீனவர்களை கைது செய்தனர். மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்த அவர்கள், இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு மீனவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறிய நிலையில், நடந்துள்ள கைது நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version