சிறைபிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்த போது எல்லை தாண்டி வந்ததாக, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அம்மீனவர்களின் காவல் மேலும் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி படகு மூழ்கியதையடுத்து, கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் உள்ள 4 தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வரும் 10-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என இந்திய துணை தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version