வரும் 2020 ஆம் ஆண்டு கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை உருவெடுக்கும்

வரும் 2020ஆம் ஆண்டு கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை உருவெடுக்கும் என்று இலங்கை ராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மகேஸ் சேனநாயக்க, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கும், பயங்கரவாதம் இல்லாமல் ஒழிப்பதற்கும் ராணுவத்தின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்தார்.

கண்ணிவெடி அகற்றுவது ராணுவத்தினரின் பணிகளில் முக்கிய ஒன்றாக உள்ளதாகவும் அவர் கூறினார். வரும் 2020 ஆம் ஆண்டு கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version