இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் -முத்தையா முரளிதரன்

இலங்கை, சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் பிரச்னைகள் குறித்தும், தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்த முத்தையா முரளிதரன், இலங்கையில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பவுத்தர்கள் என்றும், அதனால் இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடுதான் என்றும் கூறியுள்ளார்.

ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தமிழர்கள் இங்கு சிறுபான்மையினர் என்பதுதான் உண்மை என்று தெரிவித்துள்ள அவர், சிங்களவர்கள் அனைவரும் தவறிழைக்கவில்லை, 5 சதவீதத்தினர்தான் தவறிழைத்தார்கள் என்று குறிப்பிட்டார். தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கலை நீதிமன்றத்தின் மூலம் தான் தீர்க்க வேண்டும் என்றும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

 

Exit mobile version