தேனியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல்

தேனியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு வரும் நபர்களிடம் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியில் இருந்து தேனி மாவட்டத்திற்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் ஆக்ஸிஸ் வங்கி கிளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டது. ஆயினும் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்படாததால் அந்தப் பணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version