அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

கிராமப்புற இளைஞர்களின் உடற்திறனை மேம்படுத்தும் பொருட்டு, இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அனைத்து பஞ்சாயத்துகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிளாய் ஊராட்சியில், அம்மா இளைஞர்கள் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இலவச சீருடை, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை உள்ளன. 2 கோடியே 6 லட்சம் மதிப்பிட்டீல் கட்டப்பட்டுள்ள மைதானத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

Exit mobile version