மின்சார ஊழியர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான தடகள போட்டி நடைபெற்று வருகிறது.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ரத்தினவேல் எம்.பி,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சென்னை, விழுப்புரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு ஆகிய 8 மண்டலங்களை சேர்ந்த மின் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, பூ பந்து உள்ளிட்ட விளையாட்டுகளும், தடகள போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

Exit mobile version