தனியார் நிறுவங்களில் இருந்து நிலுவைத் தொகையை பெற அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்-அமைச்சர் தங்கமணி

தனியார் மின் உற்பத்தி நிறுவங்களில் இருந்து மின்துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம் சார்பில் 44வது அகில இந்திய மின்சார வாரியங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் பிரிட்ஜ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில், மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, தனியார் மின் உற்பத்தி நிறுவங்களில் இருந்து மின்துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version