ஜெய்ப்பூரில் டயர் வெடித்த நிலையில் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்

துபாயிலிருந்து ஜெய்ப்பூர் வந்த தனியார் விமானம் டயர் சேதமடைந்த நிலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.ஜி 58 விமானம் 189 பயணிகளுடன் ஜெய்ப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. தரையிறங்க தயாரான போது ஒரு டயர் வெடித்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் காலை 9 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 189 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Exit mobile version