நாளை 15 சிறப்பு ரயில்கள் இயக்கம் , அதற்கான முன்பதிவு இன்று மாலை தொடக்கம்

கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், டெல்லியில் இருந்து நாளை 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. புது டெல்லியில் இருந்து சென்னை, தீப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட உள்ளன. இதேபோல், புவனேஸ்வர், செகந்திரபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத், ஜம்மு-தாவி ஆகிய நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் நாளை இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய விரும்புவோர் www.irctc.co.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version