சென்னையில் "சர்கார்" திரைப்படத்தின் சிறப்பு காட்சி – ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பல சர்ச்சைகளுக்கு இடையே சர்கார் திரைப்படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சி இன்று அதிகாலை சென்னையில் திரையிடப்பட்டது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் உருவாகி உள்ளது. ஆரம்பம் முதலே பல சர்ச்சைகள் எழுந்தாலும் உச்சகட்டமாக, சர்காரின் கதையே திருட்டு கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் குற்றம்சாட்டினார். பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு சமாதானம் ஏற்பட்டதால் சென்னை நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை வருண் ராஜேந்திரன் திரும்பப்பெற்றார்.

இந்தநிலையில் இன்று காலை 4.30 மணிக்கு சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகியிருக்கும் சர்கார் திரைப்படம் வசூலில் புதிய சாதனைப்படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version