திரௌபதி திரைப்படத்திற்கு பெண்களுக்கான சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு

கடலூர் கிருஷ்ணாலயா திரையரங்கில், திரௌபதி திரைப்படத்தின் பெண்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏராளமான பெண்கள் திரைப்படத்தை காணக் குவிந்தனர்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மோகன் இயக்கத்தில் திரெளபதி திரைப்படம் வெளியானது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டின்போது, பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்த நிலையில், படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்தது. இதனால், இந்த படத்திற்கு முதல் நாளிலேயே பொதுமக்களின் ஆதரவு பெருகியது. வர்த்தக ரீதியாகவும் திரைப்படம் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில், கடலூரில் உள்ள நான்கு திரையரங்குகளிலும் திரெளபதி திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று கடலூர் ஜி ஆர் கே லிங்க் ரோட்டில் அமைந்துள்ள கிருஷ்ணாலயா திரையரங்கில், காலை 11 மணிக்கு, பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.  திரௌபதி திரைப்படத்தை காண ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர்.

Exit mobile version