சிவராத்திரியை முன்னிட்டு எறும்பீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

சிவராத்திரியை முன்னிட்டு எறும்பீஸ்வரருக்கு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. பால், பன்னீர், இளநீர், திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடி வழிபட்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Exit mobile version