மார்கழி மாதம் தொடக்கம்: திண்டுக்கல் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை

மார்கழி மாதம் தொடங்கியதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட கோவில்களில் விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், அதிகாலையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று முதல் தொடங்கியுள்ள மார்கழி மாதத்தை முன்னிட்டு, சின்னாளப்பட்டியில் உள்ள கோவில்களில் பெண்கள் அதிகாலையில் சிறப்பு விளக்கு வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் அம்மன் தோத்திரம் பாடி அம்மனை தரிசித்தனர். மார்கழி மாதத்தையொட்டி அனைத்து கோவில்களிலும் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version